சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Urdu
Cyrillic/Russian
Marati
சேக்கிழார்
வாயிலார் நாயனார் புராணம்
12 -ஆம் திருமுறை 12.510
கறைக் கண்டன் சருக்கம்
புகழ் விளங்கும் சிறப்புடைய தொண்டை நன்னாட் டில், வளமை மிக்க வாய்மையால் சிறந்த வளமுடைய பதியாக விளங் குவது, பற்பல பெருங்குடி மக்களும் வழிவழியாகத் தொடர்ந்து வதிந்து வரும் செல்வம் நிறைந்த திருமயிலாபுரியாகும். *** சொல் - புகழ். மயிலாபுரி - மயில்களின் ஒலி மிக்க ஊர் ஆதலின் இப்பெயர் பெற்றது. மயில் ஆர்ப்பு ஊர் - மயிலாப்பூர் என்றாயிற்று. நாவரசர் திருவாக்கில் 'மயிலாப்பு' என்றும், ஞானசம் பந்தர் திருவாக்கில் 'மயிலை' என்றும் சுருங்க அழைக்கப்பெற்றுள்ளது. இத்திருநகர் இன்று சென்னைக் கடற்கரையில் திருவொற்றியூருக்கும் திருவான்மியூருக்கும் நடுவாக விளங்குகின்றது.
பெருங்கடல், தன்னிடம் உள்ள மணிமுதலான நிதிகளைத் தேடிவைப்பதற்குரிய பண்டாரம் இதுவாகும் எனக் கூறு மாறு, அழகிய ஆடும் கொடிகளையுடைய அந்நகரத்தின் பக்கங்கள் எல்லாம் மரக்கலங்களாகிய சிமிழினால் தள்ளும், *** சேம வைப்பு - வேண்டும் பொழுது எடுத்துக் கொள் ளுதற்குரிய பொருள் வைப்பிடம். மணி முதலாயினவும், நீர்வாழ் உயிரினங்கள் பலவும் பல்கி இருத்தலினாலும், நாளும் பல்வேறு நாடுகளிலிருந்து பல்வேறு பொருள்கள் கப்பல் வழிவந்து கொண்டு இருத்தலாலும் கடலைப் பெரு நிதி உடையதாகக் கூறினார். செப்பு - சிமிழ்; மணிமுதலிய பொருள்களைச் சிமிழில் வைப்பர். அது பற்றி மரக்கலங்களைச் செப்பு (சிமிழ்) என்றார். கடல் இந்நாட்டைத் தனக்குரிய பொருள்களின் வைப்பிடமாகக் கருதி, பல்பொருள்களை யும் மரக்கலங்களின் வழித்தள்ளும் என்பது கருத்து.
சேம வைப்பு - வேண்டும் பொழுது எடுத்துக் கொள் ளுதற்குரிய பொருள் வைப்பிடம். மணி முதலாயினவும், நீர்வாழ் உயிரினங்கள் பலவும் பல்கி இருத்தலினாலும், நாளும் பல்வேறு நாடுகளிலிருந்து பல்வேறு பொருள்கள் கப்பல் வழிவந்து கொண்டு இருத்தலாலும் கடலைப் பெரு நிதி உடையதாகக் கூறினார். செப்பு - சிமிழ்; மணிமுதலிய பொருள்களைச் சிமிழில் வைப்பர். அது பற்றி மரக்கலங்களைச் செப்பு (சிமிழ்) என்றார். கடல் இந்நாட்டைத் தனக்குரிய பொருள்களின் வைப்பிடமாகக் கருதி, பல்பொருள்களை யும் மரக்கலங்களின் வழித்தள்ளும் என்பது கருத்து. *** முத்தலம்பு முந்நீர் - தன்பால் உள்ள முத்துக்களைக் கொழித்துக் கரைக்கண் சேர்க்கும் கடல். கடலிடத்துக் காணும் சிப்பி களில், மழை பொழிவதால், தோன்றும் மணிகளும் உளவாதலின் முத்தலம்பு . . மேகமும் எனக் கூட்டி உரைத்தலும் ஒன்று. நாகு - பெண் கன்று (நாம்பன் - ஆண் கன்றுக்கு வருவது போல).
வெண்ணிறமுடைய மாளிகைகளையுடைய வீதிக ளின் பக்கங்களில் உள்ள இறப்புக்களில், அசையும் கொடிகளின் வரிசையுள் நுழைந்து சேர்கின்ற தூய்மையான வெண்மை நிறமுடைய மதி, பவளம் போன்ற வாயையுடைய பெண்களின் முகங்களைப் பார்த்து அஞ்சி மறைவிடத்தைச் சேர்ந்து ஒதுங்குவது போல் விளங்கும். *** வெண்ணிறமுடைய மாளிகைகளையுடைய வீதிக ளின் பக்கங்களில் உள்ள இறப்புக்களில், அசையும் கொடிகளின் வரிசையுள் நுழைந்து சேர்கின்ற தூய்மையான வெண்மை நிறமுடைய மதி, பவளம் போன்ற வாயையுடைய பெண்களின் முகங்களைப் பார்த்து அஞ்சி மறைவிடத்தைச் சேர்ந்து ஒதுங்குவது போல் விளங்கும்.
தெருக்கள் எங்கும் திருவிழாக்களின் அழகு மேம்பாடுகள் விளங்கும். பருவம் வாய்ந்த இளைஞர்களின் தூதாக இயங்குவன போல் வண்டுகள் பெண்களின் கூந்தல்கள் எங்கும் விளங்கும். சுண்ணச் சாந்து பூசி ஒப்பனை செய்யப்பட்ட மாடங்கள் எங்கும், அழகிய நிதிகளும் அணிகளும் நீங்காமல் விளங்கும். *** தெருக்கள் எங்கும் திருவிழாக்களின் அழகு மேம்பாடுகள் விளங்கும். பருவம் வாய்ந்த இளைஞர்களின் தூதாக இயங்குவன போல் வண்டுகள் பெண்களின் கூந்தல்கள் எங்கும் விளங்கும். சுண்ணச் சாந்து பூசி ஒப்பனை செய்யப்பட்ட மாடங்கள் எங்கும், அழகிய நிதிகளும் அணிகளும் நீங்காமல் விளங்கும்.
நிலை பெற்ற சிறப்புடைய திருமயிலாபுரி என்னும் பெரு நகரத்தில், இத்தகைய பழைமையால் நீண்ட சூத்திரர் என்னும் வேளாளரின் பழங்குலமானது, நன்மைகள் எல்லாவற்றுள்ளும் சிறந்த நன்மை அடையுமாறு, உயர்ந்த சீலமும் புண்ணியமும் உடைய வாயி லார் என்னும் பெயரையுடைய தவப் பேற்றினர் வந்து தோன்றினார். *** சூத்திரர் என்பது பற்றி முன் 440ஆவது பாடலில் கூறப்பட்டதை ஈண்டும் கடைப்பிடிக்க. நன்மைகள் எல்லாவற்றுள் ளும் சிறந்த நன்மை வீடுபேறாம். அதனை வழங்குவதற்குரியவனும் உடையவனும் இறைவன் ஒருவனே ஆவன். அப்பெருமானை அடைதற்குரிய சீலமும் புண்ணியமும் உடையவர் வாயிலார் என்பதாம். தபோதனர் - தவத்தையே செல்வமாக உடையவர்.
சூத்திரர் என்பது பற்றி முன் 440ஆவது பாடலில் கூறப்பட்டதை ஈண்டும் கடைப்பிடிக்க. நன்மைகள் எல்லாவற்றுள் ளும் சிறந்த நன்மை வீடுபேறாம். அதனை வழங்குவதற்குரியவனும் உடையவனும் இறைவன் ஒருவனே ஆவன். அப்பெருமானை அடைதற்குரிய சீலமும் புண்ணியமும் உடையவர் வாயிலார் என்பதாம். தபோதனர் - தவத்தையே செல்வமாக உடையவர்.
குறிப்புரை:
இறைவரை, மறவாமை எனும் கருவினால் அமைத்த மனமான கோயிலுள் எழுந்தருளச் செய்து, நிலை பெறுமாறு இருத்தி, அவ்விடத்திலேயே பொருந்துமாறு அப்பெருமானை உணரும் ஞானம் என்கின்ற ஒளிவீசும் சுடர் விளக்கை ஏற்றி, அழிவற்ற பேரானந்தமான நீரினால் திருமஞ்சன மாட்டி, அறவாணனக்கு அன்பு என்னும் அமுதை அமைத்து வழிபடுவாராய். *** இறைவரை, மறவாமை எனும் கருவினால் அமைத்த மனமான கோயிலுள் எழுந்தருளச் செய்து, நிலை பெறுமாறு இருத்தி, அவ்விடத்திலேயே பொருந்துமாறு அப்பெருமானை உணரும் ஞானம் என்கின்ற ஒளிவீசும் சுடர் விளக்கை ஏற்றி, அழிவற்ற பேரானந்தமான நீரினால் திருமஞ்சன மாட்டி, அறவாணனக்கு அன்பு என்னும் அமுதை அமைத்து வழிபடுவாராய்.
இறைவரை, மறவாமை எனும் கருவினால் அமைத்த மனமான கோயிலுள் எழுந்தருளச் செய்து, நிலை பெறுமாறு இருத்தி, அவ்விடத்திலேயே பொருந்துமாறு அப்பெருமானை உணரும் ஞானம் என்கின்ற ஒளிவீசும் சுடர் விளக்கை ஏற்றி, அழிவற்ற பேரானந்தமான நீரினால் திருமஞ்சன மாட்டி, அறவாணனக்கு அன்பு என்னும் அமுதை அமைத்து வழிபடுவாராய். *** 'சிவனடியைச் சேரும் முத்தி செப்புவதிங்குயாமே' என்பதால் வீடுபேறு அடைந்தார் என்பது கருத்து.
கங்கை பொருந்திய சடையையுடைய சிவபெருமா னைத் தம் நீடிய மனக் கோயிலில் நிறுவி, மிகுந்த அன்புடன் வழிபட்டு, அடியவர்களுடன் இருந்து, நீங்காத வீட்டு நெறியினைப் பெற்ற பெருந்தகையாரான வாயிலார் நாயனாரைப் போற்றி, சிறப்புடைய திருநீடூரில் வாழ்ந்த 'முனையடுவாரின்' இயல்பை இனிக் கூறுவாம். *** கங்கை பொருந்திய சடையையுடைய சிவபெருமா னைத் தம் நீடிய மனக் கோயிலில் நிறுவி, மிகுந்த அன்புடன் வழிபட்டு, அடியவர்களுடன் இருந்து, நீங்காத வீட்டு நெறியினைப் பெற்ற பெருந்தகையாரான வாயிலார் நாயனாரைப் போற்றி, சிறப்புடைய திருநீடூரில் வாழ்ந்த 'முனையடுவாரின்' இயல்பை இனிக் கூறுவாம்.
This page was last modified on Thu, 09 May 2024 01:33:07 -0400
send corrections and suggestions to admin-at-sivaya.org
naayanmaar history